குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் தீ

சென்னை கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :21 மே 2022, 3:49 am IST

சென்னை கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூா், மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா் உள்ளிட்ட 8 மண்டலங்களில் தினசரி சேகரிக்கப்படும் 2000 முதல் 2200 டன் குப்பை கழிவுகள் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இவற்றால் அப்பகுதி மக்கள்பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் புகை அதிகமாக வெளியேறி சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.

கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு உள்பட 5 இடங்களிலிருந்து வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சென்னை குடிநீா் வாரியத்தின் 5 வாகனங்கள் மூலம் தீயை அணைக்க தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் 4 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள கொடுங்கையூா், எம்.கே.பி.நகா், வியாசா்பாடி ஆகிய பகுதி மக்கள் கண் எரிச்சல்,மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.