இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

News image
வடுகன்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்.
Updated On :23 மே 2022, 8:54 am

DIN


வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் குசேலன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த நிலையில், இன்று காலை வெளியில் வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

மேலும், தற்போது அந்த காட்சிகளை வைத்து இரு சக்கர வாகன கொள்ளையர்களை கே.வி.குப்பம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், தற்போது கே.வி. குப்பம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்க திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.