டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மானாமதுரை அருகே பெரும்பச்சேரியில் ஜல்லிக்கட்டு: 20 வீரர்கள் காயம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பெரும்பச்சேரி கிராமத்தில் கோயில் விழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப் பாய்ந்தன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:22 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பெரும்பச்சேரி கிராமத்தில் கோயில் விழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப் பாய்ந்தன. மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாடுகள் முட்டியதில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.

பெரும்பச்சேரி சமயணசாமி கோயில் களரி விழாவை முன்னிட்டு கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து  500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் அணி அணியாக வந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். பல காளைகள் பிடிக்க வந்த வீரர்களை முட்டி தூக்கி வீசின. ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதில், காளைகளைப் பிடிக்க முயன்று 20 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். 

மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், ஸ்டவ் அடுப்பு, சில்வர் அண்டா, வாளி,சேர்,ரொக்கப்பணம், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைகளுக்கும்  அதன் உரிமையாளர்களுக்கும் சிறந்த மாடுபிடி காளையர்களுக்கும்  கூடுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.