இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்; புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு!
இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகைப் போராட்டம் நடத்த இளையான்குடி கண்மாய்கரை பகுதியிலிருந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த பெண்கள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர்.









