கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சேலத்தில் கல்லூரிப் பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் பலி: மறியல் போராட்டம்

சேலத்தில் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவத்தில் நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
தனியார் கல்லூரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:24 am

DIN

சேலத்தில் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவத்தில் நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவரது மகன் அப்துல் கலாம். இவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் தனியார் கல்லூரிப் பேருந்தில் இருந்து மாணவர் அப்துல்கலாம் இறங்க முற்படும்போது  தவறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. மாணவன் அப்துல்கலாம் மீது கல்லூரிப் பேருந்து ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடல் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவன் அப்துல் கலாம் பேருந்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில்  மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற விபத்து ஏற்பட்டதாகவும் மாணவனுக்கு இழப்பீட்டுத் தொகை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தர வேண்டும் என வலியுறுத்தியதோடு சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

காவல்துறையினர் வந்து சமாதானம் பேசி உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.