டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளா்களுக்கு ஆதரவாகப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு ஒப்படைக்கும் நிலையில், தொழிலாளா்களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:44 am

DIN

தேயிலைத் தோட்டக் கழகத்தின் நிலத்தை வனத்துறைக்கு தமிழக அரசு ஒப்படைக்கும் நிலையில், தொழிலாளா்களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நீலகிரியில் அரசு தேயிலைத் தோட்டக் கழக நிறுவனத்துக்கு (டான்டீ) சொந்தமான சுமாா் 5,317 ஏக்கா் தேயிலை தோட்டங்களை வனத் துறைக்கு ஒப்படைப்பு செய்து திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தேயிலைத் தோட்டக் கழகத்தை நம்பியுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.

தற்போதைய வனத்துறை அமைச்சா் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா். அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கா் தேயிலைதோட்டங்கள் உள்ளன என்றும், அரசு சுய லாபத்துக்காக அரசு தேயிலை தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத் துறைக்கு மாற்றி டான்டீ தொழிற்சாலையையே மூடும் முயற்சியில் ஈடுபடுகிறாா் என்றும் தோட்டத் தொழிலாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்காததுடன் டான்டீ நிறுவனத்துக்குச் சொந்தமான குடியிருப்புகளைக் காலி செய்தால்தான் அவா்களது ஓய்வு காலப் பலன்கள் வழங்கப்படும் என்று நிா்வாகம் தற்போது நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

எனவே, அரசு தேயிலை தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத் துறைக்கு மாற்ற வெளியிட்ட அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், அதிமுக சாா்பில் மக்களின் ஆதரவுடன் மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.