ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

காலமானார் எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன்

எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (நவ.7) அதிகாலை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

News image

விழி.பா. இதயவேந்தன்.

Updated On :7 நவம்பர் 2022, 1:04 pm

விழுப்புரம்: விழுப்புரம் நித்தியானந்தம் நகரைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான விழி.பா. இதயவேந்தன் (60) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (நவ.7) அதிகாலை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நந்தனார் தெரு என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் இதயவேந்தன். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், தமிழக அரசின் குறள்பீட விருதைபெற்றவர். தலித் இலக்கிய முன்னோடியாக அறியப்பட்ட இதயவேந்தன் விழுப்புரம் நெம்புகோல், தென்பெண்ணை, மருதம் அமைப்புகளில் செயற்பாட்டாளராக திகழ்ந்தார்.

இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மறைந்த விழி. பா. இதயவேந்தனுக்கு மனைவி விஜயலட்சுமி, மகள்கள் அஜிதாபாரதி, சாருமதி, மகன் சூரியதீபன்  உள்ளனர். தொடர்புக்கு- 8056122852.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.