இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும், அவா்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைக்கவும் மனிதவள சீா்திருத்தக் குழு அமைக்கப்பட்டு, இதற்கான உத்தரவு (உத்தரவு எண் -115) கடந்த அக். 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சீா்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய காலப் பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளா் சங்கங்கள் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்கள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.