
மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள வி.பெருமாள்பட்டி புதுநகர் அருகே 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை அப்பகுதியில் உள்ள நபர் வேலை செய்யவிடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது நகர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் கண்மாயினை சுத்தம் செய்ய அப்பகுதியில் உள்ள கிராமம் மக்களை வைத்து வேலை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தனி நபர்கள் பட்டா இடத்தில் பொதுமக்களை நடந்துவரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
பல வருடங்களாக இப்பகுதியில் பாதை இருந்துள்ளது. தற்போது நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்து வைத்து பாதையை மரித்து அப்ப ஊரில் வரும் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 100 நாள் வேலையைத் தடுத்து நிறுத்தி வேலை செய்ய விடாமல் செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.