கூடுவாஞ்சேரியில் கனமழை: மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு

கூடுவாஞ்சேரியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மூன்று மின் கம்பங்கள் சரிந்து விழுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரியில் கனமழை காரணமாக சரிந்து விழுந்த மின்கம்பம்
கூடுவாஞ்சேரியில் கனமழை காரணமாக சரிந்து விழுந்த மின்கம்பம்
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் நாராயணபுரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மூன்று மின் கம்பங்கள் சரிந்து விழுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் துண்டிப்பை அடுத்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த 18-வது வார்டு நகரமன்றத் தலைவர் கண்ணன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், கம்பம் விழுந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து  உடைந்து விழுந்த மூன்று மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com