பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சென்னையில் நிரம்பும் ஏரிகள்! நீர்மட்டத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

News image

புழல் ஏரி

Updated On :11 நவம்பர் 2022, 5:31 am

DIN

சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை குறைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதையொட்டி, செம்பரம்பாக்கம், வீராணம், புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. 

இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர்மட்டத்தை குறைத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏரி, குளம், குட்டைகள் என 175 நீர்நிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.