எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
Published on
Updated on
1 min read

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி,பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய  மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தருமபுரி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com