இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சீர்காழியில் வரலாறு காணாத கனமழை: ஒரேநாளில் 44 செ.மீ மழைப் பதிவு!

தமிழகத்தில் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. ஒரே நாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :12 நவம்பர் 2022, 8:09 am

DIN

தமிழகத்தில் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. ஒரே நாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வுமையம் மேலும் கூறுகையில், 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் சீர்காழியில் ஒரேநாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லாத மழைப் பொழிவாகும். 

சீர்காழியில் கனமழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமல்ல. மேக வெடிப்பாக இருந்தால் அதிக மழைப்பொழிவுக்கு முன்பும், பின்பும் மழை இருக்காது என்று தெரிவித்துள்ளது. 

ஒரேநாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் பூச்சிகள், பாம்புகள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேட்டங்குடி, நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகள் குளம் போல் நிரம்பியுள்ளன. வேளாண் நிலங்கள் மழைநீர் சூழ்ந்து கடல்போல்  காட்சியளிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.