நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சீர்காழி பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கடலோர கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது

News image

நாங்கூர் கிராமத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் புகுந்துள்ள வெள்ள நீர். 

Updated On :12 நவம்பர் 2022, 8:42 am IST

பூம்புகார்: சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கடலோர கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.​

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த மழையின் காரணமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

Story image

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட 18 கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக பல்வேறு செல்லனாறு, வெள்ள பள்ளம் உப்பனாறு, கோதை ஆறு உள்ளிட்ட முகத் துவார ஆறுகளின் வழியாக கடல் நீர் உட்புகுந்ததால் சின்ன பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் நீரில் மூழ்கியுள்ளது.

மேலும் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக நாங்கூர், திருநகரி, நெய்த வாசல், வேட்டங்குடி, மாதானம் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் மீண்டும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.