வேளச்சேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது
சென்னையை அடுத்த வேளச்சேரி சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டது.


சென்னை: சென்னையை அடுத்த வேளச்சேரி சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
சீர்காழியில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 44 செ.மீ. மழை பதிவானது. சென்னையிலும் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையும் படிக்க.. இவர்கள் 4 பேரும் எங்கே செல்வார்கள்?
எனினும் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வேளச்சேரி ரயில்வே சுரங்கப் பாதையில் கழுத்தளவு மழை நீர் தேங்கி நிற்பதால் அங்கு போக்குவரத்த முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளைக் கொண்டு, நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...