இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலரின் அடாவடி: வைரலாகும் விடியோ!

கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் பிடுங்கி எரிந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
சாலையில் உள்ள சிறிய மரத்தை பிடுங்கி வீசும் திமுக கவுன்சிலர் மாலதி
Updated On :12 நவம்பர் 2022, 10:48 am

DIN

கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் தொழில் அதிபர் சுபாஷ். இவர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் மரங்களை நட்டு வைத்துள்ளார்.

இந்த மரங்களை சாலையில் வைக்கக் கூடாது எனக்கூறி கோவை மாநகராட்சி 34 ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் கல்வி குழு தலைவருமான மாலதி, சுபாஷிடம் தெரிவித்துள்ளார். இதில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுபாஷ் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சிறிய மரத்தை மாலதி அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.