விடுதலையானவர்களில் 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பு: சீமான் கண்டனம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களில் 4 பேரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று அங்கு ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது
விடுதலையானவர்களில் 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பு:  சீமான் கண்டனம்
Updated on
1 min read

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களில் 4 பேரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று அங்கு ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்கள் வாழ்நாளை கழித்த நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், விடுதலையானவர்களில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான ட்விட்டரில் பதிவில், 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்ய வில்லை.

மேலும், அவர்களை ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com