சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம்: சேகர்பாபு

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். 
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம்: சேகர்பாபு

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து டிச. 27-ஆம் தேதியன்று மண்டல பூஜை முடித்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. 

இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் மையமானது இன்று முதல் அடுத்த வருடம் ஜனவரி 20-ம் தேதி வரை செயல்படும். மேலும், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999-ஐ பயன்படுத்தி சந்தேகங்களை அறிந்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com