நவ. 18 வரை சென்னை - அந்தமான் விமான சேவைகள் ரத்து

அந்தமான் தீவுக்கான விமான சேவைகள் நவம்பர் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட் பிளேயர் விமான நிலையம் அறிவித்துள்ளது.
நவ. 18 வரை சென்னை - அந்தமான் விமான சேவைகள் ரத்து

அந்தமான் தீவுக்கான விமான சேவைகள் நவம்பர் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட் பிளேயர் விமான நிலையம் அறிவித்துள்ளது.

அந்தமான் தீவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் இருந்து செல்கின்றனர். இதனால், அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும்.

இந்நிலையில், போர்ட் பிளேயர் நிலையத்தின் ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நவம்பர் 18ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், சென்னை - அந்தமான் செல்லும் 14 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com