கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2022, 6:29 am

DIN

ஈரோடு: கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரயில்வே நிலையம் (ஆர்.எஸ்) அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சன்னதி விநாயகர், கன்னிமூல கணபதி, மகா மாரியம்மன் கோயில் உள்ளது. 

Story image

இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், மகா மாரியம்மன் கருவறை அருகே வசந்த மண்டபம், கோபுரம், கன்னிமூல கணபதிக்கு கோயில் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 

கடந்த 18ம் தேதி காலை கணபதி ஹோமம், புனித நீர் எடுத்து வருவதல், மாலை 5 மணிக்கு முளைப்பாலிகை போடுதல், முனியப்பசாமி ஊர்வலம், தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், கும்பலங்காரம், ரக்ஷாபந்தனம், மகா மாரியம்மன் கும்பரூமாக பரிவார தெய்வங்களுடன் யாகசாலையில் சிறப்பு பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது. 

Story image

நேற்று(19ம் தேதி) காலை 9 மணிக்கு புண்யாகம், சுதை சிற்பங்கள் கண் திறப்பு கலசம் வைத்து, 2ம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 3ம் கால யாக பூஜையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 5 மணிக்கு 4ம் கால பூஜை நிறைவு பெற்று, கலசங்கள் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, கோபுரத்தில் வைக்கப்பட்டு விநாயகர், மகா மாரியம்மன், ஆலய விநாயகர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனதி நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

இவ்விழாவில், கொளத்துப்பாளையம், பெருந்துறை, வடமுகம் வெள்ளோடு, பிச்சாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.