அடுத்த 2 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

இன்று இரவு 9 மணிவரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
Published on
Updated on
1 min read

இன்று இரவு 9 மணிவரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி 350 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று நகர்ந்து வருகின்றது.  வடசென்னை, தெற்கு ஆந்திரம் இடையே வலுவிழந்து கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இரவு 9 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com