

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனா் சிவசங்கா் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாா்களின் அடிப்படையில் சிவசங்கா் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிக்க- பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!
கடந்த 2010-ஆம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கா் பாபா சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா சிவசங்கா் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து அண்மையில் உத்தரவிட்டாா்.
இதனிடையே வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
சிபிசிஐடியின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.