ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த 4 யானைகள்

தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 4 யானைகள் கிராமத்துக்குள் புகுந்தன.

News image
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகள்.
Updated On :22 நவம்பர் 2022, 7:13 am

DIN


தருமபுரி: தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 4 யானைகள் கிராமத்துக்குள் புகுந்தன.

பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து  20 வயது கொண்ட 3 யானைகள், ஒரு குட்டி யானை என  4 காட்டு யானைகள் உணவு தேடி ஈச்சம்பள்ளம் கிராமத்துக்குள் அதிகாலை புகுந்தன. இந்த யானைகள் அக்கிராமத்துக்குள் விளை நிலங்கள் இருந்த நெல், தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

Story image

இதைக் கண்ட கிராம மக்கள் பாலக்கோடு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் அப்பகுயில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை அருகில் இருந்த மொரப்பூர் காப்புக் காட்டுக்கு விரட்டியடித்தனர். மேலும் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.