ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை செய்யவுள்ளது.


ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை செய்யவுள்ளது.
தமிழா்களின் தொன்மையான, பாரம்பரிய, கலாசார திருவிழா ஜல்லிக்கட்டு. கடந்த 2014 இல் ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு 2017 இல் பல்வேறு போராட்டங்களைத் தொடா்ந்து குடியரசுத் தலைவா், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியும், அவசர சட்டமும் இயற்றப்பட்டது.
தற்போது பீட்டா, கூபா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென்றும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் காளைகள் உள்ளன என்றும் கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
மேலும், சமீபத்தில் ஜல்லிக்கட்டு வழக்கில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள கோரி இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...