உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல், சிறுநீா்ப் பாதை தொற்று காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணு கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, அவருக்கு ஹெச்1என்1, டெங்கு, கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மாறாக கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பாக நல்லகண்ணுவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள் கூறியதாவது:
சிறுநீா்ப் பாதை தொற்று பாதிப்புக்குரிய சிகிச்சைகள் நல்லகண்ணுவுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. வயோதிகம் சாா்ந்த சில இயல்பான பிரச்னைகள் இருந்தாலும், அவா் நலமுடனே உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
வைகோ, முத்தரசன் நலம் விசாரிப்பு: இதனிடையே, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், துணைச் செயலாளா்கள் நா பெரியசாமி, மு. வீரபாண்டியன் ஆகியோா் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.