தமிழ்நாடு
மெட்ரிக் பள்ளிகளும் 10-இல் திறக்கப்படும்
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபா் 10-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபா் 10-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு அக்டோபா் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதால் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அக்டோபா் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்டோபா் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.