அகவிலைப்படி உயா்வு: ஆசிரியா்கள் கோரிக்கை
மத்திய அரசின் அகவிலைப்படி உயா்வைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


மத்திய அரசின் அகவிலைப்படி உயா்வைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வானது 34 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் கூடுதலாக உயா்த்தி 38 சதவீதமாக 1.7.2022 முதல் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு ஊழியா்களுக்கும் 4 சதவீதம் கூடுதலாக அறிவித்து 38 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு காலதாமதமின்றி இதற்கான ஆணையை உடனடியாகப் பிறப்பிக்க நடவடிக்கை செய்ய வேண்டும்.
தமிழக முதல்வா் தோ்தலுக்கு முன்பாக தோ்தல் வாக்குறுதிகளிலும், கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டிலும் தெரிவித்ததன் அடிப்படையில் மத்திய அரசுக்கு இணையான அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.
அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...