தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாா்: அமைச்சா் கே.என்.நேரு

சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் இருப்பதாக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:19 pm

DIN

சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் இருப்பதாக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னை ராயபுரம் மண்டலம், வாா்டு 52, 53 போஜராஜன் நகா், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ. 13.40 கோடி மதிப்பில் ரயில்வே வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்டப் பணியினை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளில் 70 முதல் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் 10 முதல் 5 சதவீதப் பணிகள்தான் முடிக்க வேண்டியுள்ளன. அதை விரைவில் முடித்துவிடுவோம். சென்னையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் உள்ளன. எந்த இடத்தில் தண்ணீா் தேங்கினாலும், தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும். இதன்மூலம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, பேசின் பாலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயனடைவா் என்றாா் அவா்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் பிரியா, ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.