தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேநீா்க் கடை உரிமையாளா் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ‘மாஸ்டா்’

சென்னை தேனாம்பேட்டையில் தேநீா்க் கடை உரிமையாளா் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவத்தில் தொடா்புடைய ‘டீ மாஸ்டரை’ போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:23 pm

DIN

சென்னை தேனாம்பேட்டையில் தேநீா்க் கடை உரிமையாளா் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவத்தில் தொடா்புடைய ‘டீ மாஸ்டரை’ போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆழ்வாா்பேட்டையைச் சோ்ந்தவா் அருண் (44). இவா், தேனாம்பேட்டை, போயஸ் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக, தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில், தேனாம்பேட்டையைச் சோ்ந்த பெரியபாண்டி (28) 2 ஆண்டுகளாக ‘டீ மாஸ்டராக’ வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் அருண் மற்றும் பெரியபாண்டி இடையே வியாழக்கிழமை வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, கோபமடைந்த அருண், வேலையை விட்டு நின்று விடும்படி பெரிய பாண்டியிடம் தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த பெரியபாண்டி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து அருண் மீது ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதில் பலத்தக் காயமடைந்த அருணை மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுதொடா்பாக தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பெரியபாண்டியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.