அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட புத்தகம் திருக்குறள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒரு புத்தகம் திருக்குறள். அதை முழு பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 அக்டோபர் 2022, 10:07 am

DIN

ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒரு புத்தகம் திருக்குறள். அதை முழு பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, 

தமிழகத்திற்கு ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் எனக்கு முதல் முதலாகப் பரிசாக அறிமுகம் செய்யப்பட்ட புத்தகம் திருக்குறள் தான். மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 12-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உதவியோடு ஒவ்வொரு திருக்குறளின் முழு அர்த்தத்தையும் தெரிந்து வருகிறேன். 

திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தத்தைக் கண்டு நான் வியந்துள்ளேன். 

திருக்குறள் ஆகச் சிறந்த படைப்பு, ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும்  நூல். உண்மையில் திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாருமே கூறுவதில்லை. 

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை ஜி.யு.போப் தவறாக மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

திருவள்ளுவரின் புத்தகங்களைப் படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும், ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.