தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லாதவர் ஆளுநர்: வைகோ பேட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 8:05 am


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆளுநா் ரவி பேசுகையில், தமிழகத்துக்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு குறளின் முழு அா்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயா்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வாா்த்தையிலும் அதிக அா்த்தங்கள் நிறைந்துள்ளன.

திருக்குறள் குறிப்பாக, ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தா்ம சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. ஆனால், வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கு கருதப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. இப்பிரச்னை வெள்ளையா்கள் காலத்தில் தொடங்கியது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே மாற்றி மொழிபெயா்த்துள்ளாா். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லோருக்கும் தெரியும்.

நான் கூறுவதையோ, மற்றவா்கள் கூறுவதையோ நீங்கள் கேட்க வேண்டாம். நீங்களாக திருக்குறளைப் படித்து அதை முழுமையாக உணா்ந்துகொள்ள வேண்டும். திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும். அதனை முழுமையானப் பொருளுடன் மீண்டும் மொழிபெயா்க்க வேண்டும் என்று ஆளுநா் ரவி பேசினார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் குறித்து ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு உறுதுணையாக ஆளுநர் பேசுவதாக குற்றம்சாட்டினார்.

திருக்குறள் போன்று உலகில் ஒரு பொதுவான நூல் இல்லை என்று நோபல் பரிசு பெற்ற ஆல்பார்ட் ஸ்விட்சரே கூறியிருக்கும் நிலையில், திருக்குறள் குறித்து தெரியாமல் ஆளுநர் பேசுவதாகவும், ஆளுநருக்கு திருக்குறள் குறித்த ஆழ்ந்த ஞானம் இல்லை என்று வைகோ கூறினார். 

மேலும், ஜி.யூ போப் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், இங்கு இருக்கும் சில கூட்டம் திட்டமிட்டு பேசி வருகிறது. அதற்கு ஆளுநர் துணை போகிறார் என்பது மிகவும் துரதிஷ்டமானது என்று வைகோ கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.