பொறியியல் மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் இருக்காது: அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் என்பது இருக்காது என உயர்கல்வித் துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் என்பது இருக்காது என உயர்கல்வித் துறை  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

உயர்கல்வித் துறை  அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் என்பது இருக்காது.  

இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்.13 ஆம் தேதி பொறியியல் 3 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com