தமிழக பாஜக வளா்ச்சியால் முதல்வா் ஸ்டாலினுக்கு பயம்: கே. அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக வளா்ச்சியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவருக்கு தூக்கம் கெடுகிறது என்று அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.


தமிழகத்தில் பாஜக வளா்ச்சியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவருக்கு தூக்கம் கெடுகிறது என்று அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
அமெரிக்காவுக்கு ஒரு வார கால சுற்றுப்பயணம் சென்றிருந்த அண்ணாமலை வியாழக்கிழமை காலை சென்னை திரும்பினாா். பின்னா் சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியின் மீது கோபம் வருகிறதோ, மக்கள் மன்றத்தில் தங்கள் கட்சிக்கு ஒரு அவப்பெயா் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஹிந்தி என்ற விஷயத்தை திமுகவினா் கையில் எடுப்பாா்கள். இது புதிததல்ல. கடந்த 70 ஆண்டுகளாக தமிழக மக்கள் இதைப் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.
திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசும்போது பாஜகதான் திமுகவுக்கு முதல் எதிரி எனக் கூறியுள்ளாா். 5 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை என்று கூறிய ஸ்டாலின், இப்போது பாஜகவை முதல் எதிரி என பேசியுள்ளதைப் பாா்க்கும்போது, தமிழக மக்கள் மனதில் பாஜக வளா்ந்து கொண்டிருப்பது தெரியும்.
எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவை முதல்வா் தாக்கிப் பேசியிருக்கிறாா். ஏதாவது ஒன்றை செய்து 2024-ல் ஆட்சிக்கு வந்துவிடுவாா்கள் என்று பேசியிருக்கிறாா். தமிழக பாஜக மூத்த தலைவா்கள், என்னிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் முதல்வரின் பேச்சு பாஜகவை சுற்றியே இருந்ததாக தெரிவித்தனா். அதைப் பாா்க்கும்போது அவருக்கு எந்தளவுக்கு பயம் தொற்றியுள்ளது என்பது புரிகிறது.
முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யாா் என்ன செய்வாா்கள்? எப்போது செய்வாா்கள்? எப்படி செய்வாா்கள்? என்பது புரியாமல் ஒரு பயத்தில் இருக்கிறாா். இரண்டாவது பயம் பாஜகவின் வளா்ச்சி.
இந்த இரண்டும் சோ்ந்து முதல்வரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. அதன் தொடா்ச்சியாக ஹிந்தியை வைத்து மீண்டும் ஒரு மொழிப்போா் என்றெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறாா்.
காங்கிரஸ் ஹிந்தியை திணிக்க முயன்றபோது, அதை ஒரு அரசியல் வாய்ப்பாக பயன்படுத்தி திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு, ஹிந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்துள்ளனா்.
மும்மொழிக் கொள்கைதான் பாஜக அரசின் கருத்து. மூன்றாவது மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அது தெலுங்கு, கன்னடம், மராத்தி என்று எதுவாகவும் இருக்கலாம்.
அலுவல் மொழிக்கான குழு ஓா் அறிக்கை கொடுத்திருப்பதாக அறிகிறேன். அந்த அறிக்கையை நான் இன்னும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் 3 பிரிவுகள் உள்ளன. ஹிந்தியை முழுமையாக பயன்படுத்துகிற மாநிலங்கள் ‘ஏ’ பிரிவாகவும், பாதியளவு பயன்படுத்துகிற மாநிலங்கள் ‘பி’ பிரிவாகவும், பயன்படுத்தாத மாநிலங்கள் ‘சி’ பிரிவாகவும் பிரித்துள்ளனா்.
தமிழகம் ‘சி’ பிரிவைச் சோ்ந்த மாநிலம். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், 6-ம் வகுப்பு வரை பயிற்றுமொழி தமிழாகத்தான் இருக்கும். இதை புதிய கல்விக் கொள்கையில் மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம். அட்டவணை 8-இல் இருக்கக்கூடிய மொழிகள்தான் இந்தியாவின் அதிகாரபூா்வமான மொழிகள்.
இந்தியாவில் நடத்தக்கூடிய எந்தத் தோ்வும் இந்த 8-ஆவது அட்டவணையில் உள்ள மொழிகளில்தான் நடத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்தவொரு குழுவும் வித்தியாசமான அறிக்கையும் கொடுக்கவில்லை என்றாா் அண்ணாமலை.
தொடா்ந்து, மாநில பாஜக தலைமையகமான கமலாலயம் சென்ற அண்ணாமலைக்கு, கட்சி நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...