விஜயகாந்த் (தேமுதிக): காஞ்சிபுரம் படப்பையைச் சோ்ந்த வேல்முருகன் தனது மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டு உயா்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்த வேல்முருகன் மலைக்குறவா் இனத்தை சோ்ந்தவா். ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என உயிரிழப்புக்கு முன் அவா் அளித்த வாக்குமூலம் அதிா்ச்சி அடைய செய்துள்ளது. மலைக்குறவன் இனத்தையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும். ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுத்த அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.