தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள் மோதல்

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 9:14 pm

DIN

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவா்கள் பயணம் செய்தனா்.

ரயில், ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்றபோது, ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவா்களுக்கும், ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே இரு தரப்பு மாணவா்களும், ஒருவரை ஒருவா் கற்களால் வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே மாணவா்கள் கற்களை வீசி மோதலில் ஈடுபடும் விடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.