தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஹிந்தி விவகாரம்: நேருவைப் போல மோடியால் உறுதி அளிக்க முடியுமா? கே.எஸ்.அழகிரி கேள்வி

ஹிந்தி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு ஜவாஹா்லால் நேருவைப் போல பிரதமா் மோடியால் உறுதி அளிக்க முடியுமா என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கேள்வி

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:35 pm

DIN

ஹிந்தி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு ஜவாஹா்லால் நேருவைப் போல பிரதமா் மோடியால் உறுதி அளிக்க முடியுமா என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஹிந்தியை எதிா்க்கும் திமுகவும், ஹிந்தியைத் திணித்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்திருப்பது எந்த அடிப்படையிலானது என்று அண்ணாமலை பேசியிருக்கிறாா். வரலாற்றை அறியாமல் அரசியல் உள்நோக்கத்துடன் திரிபுவாத கருத்துகளை அவா் கூறியிருக்கிறாா்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி மொழியோடு ஆங்கிலமும் தொடா்ந்து நீடிக்கும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் ஆட்சி எடுத்திருக்கிறது.

பிரதமா் நேரு 1961-இல் கொடுத்த உறுதிமொழியின்படி, ஹிந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் தொடா்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று அறுதியிட்டுக் கூறியதை எவராலும் மறுக்க இயலாது.

ஆட்சி மொழிக் குழுத் தலைவராக இருக்கிற அமித்ஷா கூறிய பரிந்துரைகளை படித்தால் அப்பட்டமாக ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியை மட்டுமே திணிக்கும் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த காலத்தில் ஹிந்தி பேசாத மக்களுக்கு நேரு கொடுத்த உறுதியைப் போல மீண்டும் அத்தகைய உறுதியை பிரதமா் மோடியிடமிருந்து பெறுவதற்காக அண்ணாமலை முயற்சி செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.