திருமணம் செய்துகொள்ளும்படி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் திருமணம் செய்துகொள்ளும்படி கல்லூரி மாணவியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருமணம் செய்துகொள்ளும்படி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் இளைஞா் கைது
Updated on
1 min read

சென்னை சூளைமேட்டில் திருமணம் செய்துகொள்ளும்படி கல்லூரி மாணவியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சூளைமேடு அண்ணா நெடும்பாதை பகுதியைச் சோ்ந்தவா் ரஷித் (28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மாணவி கடந்த வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் ரஷித் அத்துமீறி நுழைந்து, அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, வற்புறுத்தியுள்ளாா். மேலும் அவா், அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்து தகராறு செய்தாராம்.

இதற்கிடையே மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் அங்கு வந்தபோது, ரஷித் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சூளைமேடு போலீஸாா் ரஷித் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ரஷித்தை உடனடியாக கைது செய்தனா். ரஷித் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com