காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காரைக்கால் மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கியதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அவரும், மணியன், மாதேஷ், சதீஷ், அய்யப்பன், மணிபாலன், அபிலேஷ் ஆகியோர் வியாழக்கிழமை மாலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகில் சென்றனர்.
கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு 4 படகுகளில் வந்த மர்ம நபர்கள் தனசேகரன் படகை சுற்றிவளைத்து, படகில் ஏறி மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படலிருந்த 7 பேரும் காயமடைந்தனர். மேலும் படகிலிருந்த பல்வேறு சாதனங்கள், கைப்பேசிகள், வலை உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நிலையில் 7 பேரும் காரைக்காலுக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தனர். குடும்பத்தினர், மீனவ கிராமத்தினர் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!

தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோல்வி!

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


