கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பரந்தூர் விமான நிலையம்: 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்படுகிறது.

News image
பரந்தூர் விமான நிலையம் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
Updated On :15 அக்டோபர் 2022, 12:10 pm

DIN


சென்னை: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்படுகிறது.

போராட்டக் குழுவினர், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அமைச்சர்கள் குழு உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு உள்ளிட்டோரை,  பரந்தூர்  விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் இன்று காலை சந்தித்துப் பேசினர்.

பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் கொண்டுவரப்பட்டால், எங்களது புவியியல் பாதிப்பு விவசாயிகள் பாதிப்பு, பண்பாடு  எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர்களிடம் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறினோம். இதையடுத்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில், புதிய விமான நிலையத்துக்கு எதிராக 13 கிராம மக்கள் 80 நாள்களாக நடத்தி வரும் அனைத்து விதமான போராட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.