வாலாஜாபேட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு வாலாஜாப்பேட்டை கனவு மாராத்தன் என்ற பெயரில் போதை விழிப்புணர்வு மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கியது.
வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாளாகத்தில் இருந்து காலை 5.30 மற்றும் 6.30 மணியளவில் தொடங்கிய மாராத்தான் போட்டிகளை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், டிஎஸ்பி பிரபு, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதிலும் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 முதல் 70 வயது வரையிலான சிறுவர், சிறுமியர், இளம் பெண்கள், பெண்கள், ஆண் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.