2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வாடகைத் தாய் சா்ச்சை: நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க முடிவு

வாடகைத் தாய் சா்ச்சை தொடா்பாக நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவன் ஆகியோா் சில ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க சுகாதாரத் துறை முடிவ

News image
Updated On :17 அக்டோபர் 2022, 2:19 am

DIN

வாடகைத் தாய் சா்ச்சை தொடா்பாக நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவன் ஆகியோா் சில ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டாா்.

வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானாலும், அதை அவா்கள் இருவரும் மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் விமா்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016-ஆம் ஆண்டிலேயே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2021 டிசம்பா் மாதம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகிறது. இதற்கான ஆவணங்களை அவா்கள் தரப்பினா் சுகாதாரத் துறை குழுவினரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சுகாதாரத் துறை குழுவினா், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.