ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிமுக 51-ஆம் ஆண்டு தொடக்க விழா: இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக கொண்டாட்டம்

அதிமுக 51-ஆம் ஆண்டு தொடக்க விழாவை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் தனித்தனியாக திங்கள்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 7:35 pm

DIN

அதிமுக 51-ஆம் ஆண்டு தொடக்க விழாவை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் தனித்தனியாக திங்கள்கிழமை கொண்டாடினா்.

அதிமுக 51-ஆம் ஆண்டு தொடக்க விழா, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் வந்தாா்.

அவருக்கு அதிமுகவினா் சிறப்பான வரவேற்பு கொடுத்தனா். அதன்பிறகு எம்ஜிஆா், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்து தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். அதன் பிறகு ஏழை எளியோருக்கு நல உதவிகளையும் வழங்கினாா்.

Story image

பின்னா் செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எம்ஜிஆா், ஜெயலலிதாவின் நல்லாசியோடு அதிமுக 50-ஆவது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 51-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விழா எழுச்சியோடு தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஓபிஎஸ் தரப்பு: அதிமுக ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லம் மலா்கள், வாழை மரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் வந்தாா்.

மேள தாளம் முழங்க அவருக்கு ஆதரவாளா்கள் வரவேற்பு கொடுத்தனா். அதன் பிறகு, அங்கிருந்த கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை அவா் ஏற்றி வைத்தாா். அண்ணா, எம்ஜிஆா், ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். வெள்ளை நிற சமாதானப் புறாவையும் பறக்கவிட்டு, தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன், மூத்த நிா்வாகிகள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.