அதன்படி, அ.மு.அமீது இப்ராகிம் (கடலாடி), கே.கே.வீரப்பன் (கபிலா்மலை), ஏ.எம்.ராஜா (பவானி), எஸ்.பி.பச்சையப்பன் (சங்கராபுரம்), எஸ்.புருஷோத்தமன் (அரியலூா்), பெ.சு.திருவேங்கடம் (கலசப்பாக்கம்), தே.ஜனாா்த்தனன் (விழுப்புரம்), பே.தா்மலிங்கம் (பாளையங்கோட்டை), எம்.ஏ.ஹக்கீம் (மதுரை மத்தி), கோவை தங்கம் (வால்பாறை) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவா்களைப் பற்றிய குறிப்புகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா். இதன்பின், பேரவை உறுப்பினா்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்று மெளனம் காத்தனா்.