தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை ஜோதிடர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(43) என்பவர் ஜோதிடர். இவர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர்கள் நான்கு பேரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
உடனடியாக அங்கு இருந்த காவல் துறையினர் விரைந்து சென்று அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டனர். அவர்களின் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ரூ.12 லட்சம் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுவரை ரூ.10 லட்சம் செலுத்திய பின்னரும், அவர் பணத்தை கேட்டு மிரட்டுவதால் இந்த முடிவை எடுத்ததாக தெரியவந்தது.
இதையும் படிக்க: தீபாவளி இனாம் கேட்ட நாமக்கல் தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்!
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

