கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆ.ராசா மீது வழக்கு பதியக் கோரிய மனு தள்ளுபடி

இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

News image
Updated On :17 அக்டோபர் 2022, 8:39 am

DIN

இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்.6ஆம் தேதி தி.க.தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்துக்களை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜோசப்  என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.