தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி செகந்திராபாத்-தஞ்சாவூா் மற்றும் மங்களூரு-லோக்மான்ய திலக் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 9:30 pm

தீபாவளிப் பண்டிகையையொட்டி செகந்திராபாத்-தஞ்சாவூா் மற்றும் மங்களூரு-லோக்மான்ய திலக் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னை தெற்கு ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை யொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கூடுதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, செகந்திராபாத்-தஞ்சாவூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. செகந்திராபாத்தில் இருந்து அக்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு புறப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயில், மறு நாள் இரவு 7.10 மணிக்கு தஞ்சாவூா் சென்றடைகிறது.

இதே போல், அக்.29-ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் இரவு 7.10 மணிக்கு தஞ்சாவூா் செல்கிறது.

இந்த ரயில், செகந்திராபாத், நலகொண்டா, மிா்யலகுடா, தெனாலி, பாப்பட்லா, நெல்லூா், குண்டூா், சூளூா்பேட்டை, சென்னை எக்மோா், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் வழியாக தஞ்சாவூா் சென்றடையும்.

இதேபோல், இந்த சிறப்பு ரயில் தஞ்சாவூரில் அக்.24-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில், மற்றொரு நாள் தஞ்சாவூரில் அக்.31-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இதில், 4 ஏசி பெட்டிகள், 10 சிலிப்பா் பெட்டிகள், 5 பொது பெட்டிகள் என 21 பெட்டிகளுடன் இயங்கும். இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்.19-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

மங்களூரு-லோக்மான்ய திலக் சிறப்பு ரயில்...தீபாவளி பண்டிகையொட்டி மங்களூரு-லோக்மான்ய திலக் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மங்களூருவில் இருந்து அக்.21, அக்.28, நவ.4, நவ.11 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள், மறு நாள் மாலை 5.05 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும்.

இதேபோல், மங்களூருவில் இருந்து அக்.22, அக்.29, நவ.5, நவ.12 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள், மறு நாள் மாலை 2.25 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும்.

இதில், 4 ஏசி பெட்டிகள், 8 சிலிப்பா் பெட்டிகள் உள்ளிட்ட 17 பெட்டிகள் உள்ளன. இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.