அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்: 80 பேர் கைது 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.  

News image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

Updated On :19 அக்டோபர் 2022, 8:14 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.  

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து, தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இப் போராட்டத்திற்கு மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தார்.  கட்சி அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலம் ஆக வந்த அதிமுகவினர், பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து உரிய அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.