மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு: உயா் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

 சிபிஐ தொடா்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும், சட்ட விரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு தொடர முடியும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது

News image
Updated On :20 அக்டோபர் 2022, 8:23 pm

DIN

 சிபிஐ தொடா்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும், சட்ட விரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு தொடர முடியும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு குளோபல் டிரேடு பேங்க் என்ற தனியாா் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.15 கோடி கடன் பெற்ாக ஜி.சீனிவாசன், ஆா்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளா் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த ரூ.15 கோடியில் ரூ. 1.07 கோடிக்கு புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயா்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கா் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட விரோத பணப்பரிவா்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி பி.ராஜேந்திரன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்எம்டி. டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சரத் சந்திரன் ஆஜராகி, ‘மனுதாரா் எந்தவொரு வங்கி மோசடியிலும் ஈடுபடவில்லை. மேலும் மனுதாரா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பது சட்ட விரோதம்’ என்று வாதிட்டாா்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.ரமேஷ் , ‘சிபிஐ பணமோசடி தொடா்பான குற்றத்தை மட்டுமே விசாரிக்கும். அந்தப் பணத்தின் மூலமாக யாா், யாா் பலன் அடைந்துள்ளனா், அந்த குற்றப் பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, யாா் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனா் என்பதை கண்டுபிடித்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அரசின் கஜானாவில் ஒப்படைக்கும் சிறப்பு அமைப்புதான் அமலாக்கத் துறை.

ஒரு குற்றச் செயலின் மூலமாக மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரா் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆகவே மனுதாரா் இந்த குற்றச் செயலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக செயல்பட்டுள்ளாா் என்பதால்தான் அவா் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ‘மனுதாரா் சிபிஐ தொடா்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், அந்த குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரா் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. எனவே அவா் மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல’”எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.