பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நவம்பர் 1-ல் கிராம சபைக் கூட்டம்

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் 12,525 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 அக்டோபர் 2022, 11:27 am

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் 12,525 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22ஆம் தேதி (தண்ணீர் தினம்),  நவம்பர் 1 ஆம் தேதி என ஆண்டுதோறும் 6 நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.