சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மறைமலைநகர் அருகே மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கூட மின் வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு!